அன்பு உள்ளங்களுக்கு வணக்கங்கள் , எனது உள்ளத்து உணர்வுகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் . எனது தளத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றிகள்.
அம்மா..!
அம்மா..!
அம்மாவை பற்றி கவிதையா...
நிச்சயமாக முடியாது யாராலுமே...
அம்மா உன்னை பற்றி எழுத
உலகத்தில் உள்ள அனைத்து காகிதங்களும் காணாது
என்னை பொறுத்தவரை கடவுளை நான் நம்ப காரணமே
எதை எதையோ படைத்த அவன்..
அம்மாவையும் படைத்தான் என்பதற்காகத்தான் ,
அம்மா..!
நான் சொன்ன முதல் வார்த்தை ,
எல்லோரும் சொல்லும் முதல் வார்த்தை ,
..மா அம்மா.. நாங்கள் அன்றே சொன்ன முதல் கவிதை..!
கடினங்கள் கண்டு கலங்கிடாத ,
கஸ்டங்கள் கண்டு துவண்டிடாத ,
தடங்கல்கள் கண்டு தவித்திடாத ,
ஒளிவிளக்கு கண்டிப்பாய் தாய்தான்..!
அகத்தினுள் ஒளிகொண்டு ,
புறத்தினுள் வலிகொண்டு ,
அங்கங்கள் பல நொந்து ,
ஆண்டுகள் பல கடந்தும் ,
அழியாத அன்பு செலுத்தும்...
அன்புருவே அம்மா..!
அன்புக்கு ஆசானாம் ,
அறிவின் ஒளிவிளக்காம் ,
பாசத்தின் இருப்பிடமாம் ,
பொறுமையின் பொக்கிசமாம் ,
போற்றத்தகு மாணிக்கமாம் ,
போற்றிடுவோம் அன்னயரை...
பெற்றிடுவோம் இன்பமதை..!
அன்புடன் - K.பிரசன்னா
Son/Of - கோமளேஷ்வரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
Arumai.....
ammavin anbai solla eththanai kaviyum enththanai kavidhaiyum paththaadhu...
coz edhaiyum edhirparatha anbu adhu..
முற்றும் துறந்த பட்டினத்தரையே பிடித்துவைத்த பாசம் தாய் பாசம்... தம்பி உங்கள் " அம்மா" கவிதைகளில் மயங்கி விட்டேன் உங்கள் இந்த அக்கா ஏனெனில் நானும் அம்மா என்னும் அரிய பட்டம் பெற்றவள்.. உங்கள் புலமைக்கு வாழ்த்துக்கள். எதிர்காலம் நீங்கள் விரும்பியவாறு அமைய என் உள்ளம் கனிந்த ஆசிகள்..
கருத்துரையிடுக